Sunday, 23 September 2012

துபாயில் வேலை செய்வதற்கு புதிய விசா கட்டுப்பாடுகள்







மனாமா: இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், வங்கதேசம் உள்பட பல நாடுகளில் இருந்து வேலை தேடி துபாய் செல்கின்றனர். அவர்களில் பலர் சுற்றுலா விசாவிலும், கருத்தரங்கு, மாநாட்டில் பங்கேற்கும் விசாக்களிலும் வருகின்றனர். அப்படி வரும் பலர் ஆட்களையும் கடத்தி வருகின்றனர். அவர்களில் பலர் நாடு திரும்பாமல், துபாயிலேயே சட்டவிரோதமாக தங்கி விடுகின்றனர். அங்கு வேலை தேடி அலைகின்றனர். வேலை கிடைக்காமல் பலர் மசூதி, ஷாப்பிங் மால்கள், மருத்துவமனை அருகில் பிச்சை எடுக்கின்றனர்.

பிழைப்பதற்கு வழி இல்லாததால் பலர் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், விசா நடைமுறைகளை கடுமையாக்க துபாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் வேலைக்காக என்ற போர்வையில் சட்டவிரோதமாக துபாய்க்குள் பலர் நுழைவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சில நாட்டு தொழிலாளர்களுக்கு விசா வழங்க தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எலக்ட்ரீஷியன், பைப் பிட்டர்கள், விவசாயிகள், டிரைவர்கள், டெய்லர்கள், தூய்மை பணி போன்ற வேலைக்கான தொழிலாளர்களுக்கு விசா தடை செய்யப்பட உள்ளது.

No comments:

Post a Comment