நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரான்ஸ் மிருகக்காட்சி சாலையில் புலிகள் இருக்கும் பகுதிக்குள் வேலியை தாண்டி ஒருவர் குதித்தார். அதைக் கண்ட 12 வயது புலி ஒன்று அவரை கடித்து குதறி விட்டது. அவரது மரண ஓலத்தைக் கேட்ட மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் கார்பன்டை ஆக்சைடு தீயணைப்பு கருவி மூலம் காற்றை பீய்ச்சி அடித்து அந்த புலி அவரை விட்டு விலகிச் செல்லுமாறு செய்தனர். பின்னர் அந்த இளைஞரை வேலிக்கு கீழே இருக்கும் சிறிய இடைவெளி வழியாக வருமாறு கூறி மீட்டனர்.
No comments:
Post a Comment